Monday, January 14, 2019
Sunday, January 13, 2019
பிரபஞ்சன் நினைவேந்தல்
கோவை, 05.01.2019
மறைந்த எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்களின் நினைவேந்தல்
சிறப்பு கூடுகையாக எட்டாவது அனலி இலக்கியக் கூடுகை அமைந்தது. கூடுகையை ”ஒளிபடைத்தக்
கண்ணினாய் வா வா வா..” எனும் பாரதியின் பாடலை ஓவியர் ந. சுப்ரமணியன் அவர்கள் பாடி ஆரம்பித்து
வைத்தார்கள்.
கூடுகைக்கு தலைமைதாங்கிய கவிஞர் இரா. அரிகரசுதன் வரவேற்க,
கண்ணன், ஜின்னா, இஸ்மாயில் ஆகியோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர். கவிதைகளின் பாடுபொருள் பற்றி பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளை
பகிர்ந்து கொண்டனர். மறைந்த படைப்பாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் நினைவேந்தலாக அவர்தம்
வாழ்வும் படைப்பும் பற்றி கவிஞர் த. ஜீவலெட்சுமி அவர்கள் உரையாற்றினார். பிரபஞ்சனின்
சிறுகதை ஒன்றை வாசிக்கவும் செய்தார். தனக்கான வாழ்வை நிறைவாய் வாழ்ந்தவர் பிரபஞ்சன்
என்றும் எளியவ உள்ளம் கொண்டவர் என்றும் பகிர்ந்து கொண்டார்.
பிரபஞ்சனோடு தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கவிஞர் கனல்
மைந்தன் அவர்கள். இன்னும் சில படைப்பு கடமைகளை நிறைவேற்றியிருக்க வேண்டியவர் என்றார்
அவர். குறிப்பாக குடி சிலபடைப்பாளர்களின் பலகீனமாக மாறியிருப்பது பற்றிய வருத்தத்தை
பகிர்ந்து கொண்டார்.
”அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு” எனும் பாடலை சுப்ரமணியன் பாட
அதனைத் தொடர்ந்து திரு. சங்கர் அவர்களின் நன்றியோடு கூடுகை இனிது நிறைவடைந்தது.
இவண்
இரா. அரிகரசுதன்
ஓய்வாயிருக்கையில் இன்பக்கேணி ஒன்றாய் இணைகையில் இயங்கு கருவி
கோவை, டிசம்பர் 16, 2018
2016
ஆம் ஆண்டு நவம்பர் முதல் கோவையில் அனலி தன் இலக்கியக்கூடுகையை தொடர்ந்து நடத்தி வருகின்றது.
ஆறு கூடுகைகள் நடந்தபின் சிறு தொய்வு ஏற்பட்டிருந்தது. கூடுமிடம் சரிவர அமையாததுவே
இத்தொய்விற்கு முக்கியக் காரணம். தற்போது கோவை பீளமேட்டில் இயங்கிவரும் ஜி 18 அலுவலகத்தில்
கூடுகைக்கான இடம் ஒழுங்கு செய்யப்பட்டு புத்துணர்வோடு இயங்க முயல்கிறது. அதன் அடிப்படையில்
16.12.2018 அன்று மாலை ஐந்து மணியளவில் அனலி ஜி 18 ஆதரவு அலுவலக அறிமுகவிழாவை நடத்தியது.
ஓவியரும்
பேராசிரியருமான திரு. ந. சுப்ரமணியன் அவர்களின் கிராமியக்குரல் பாடலோடு நிகழ்வு இனிதே
ஆரம்பித்தது. நிகழ்வுக்கு தலைமை தாங்கிய அனலியின்
தலைவர் திரு. இரா. அரிகரசுதன் அவர்கள் வர்வேற்றும் தொடக்க உரையாற்றியும் பேசினார்.
பங்கேற்பாளர்கள் தங்களைத் தாங்களே அறிந்து கொள்ளும் பொருட்டு
அறிமுகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜி
18 பொதுநல அமைப்பின் பொறுப்பாளர் திரு. பார்த்தீபன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அனலியின் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கு தங்கள் அமைப்பு வழங்கியிருக்கும் ஆதரவே இவ்விடம்.
மேலும் இணைய இயலக்கூடியச் செயல்பாடுகளுக்கு தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதாக
ஆதரவளித்தார்.
அதனைத்
தொடர்ந்து கோவா பன்னாட்டு திரைப்படவிழாவிற்கு சென்று வந்திருந்த வானம்பாடி கவிதை இயக்கத்தின்
காத்திரமான கவிஞர்களுள் ஒருவரும் கோவை கலைக்கல்லூரியில் தமிழ்பேராசிரியராயிருந்த கவிஞர்
அக்னிபுத்திரன் தற்போதைய கனல்மைந்தன் அவர்கள் கோவா திரைப்பட விழாவின் அனுபவங்களையும்
உலகத்திரைப்படங்களின் தன்மைகள் பற்றியும் விரித்துரைத்தார்.
அனலியின்
எதிர்காலச் செயல்பாடுகளாக திரு. அரிகரசுதன் அவர்கள் அனலியின் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றும்
விதமாக 2019ஆம் ஆண்டு முதல் கோவையில் செயல்படவிருக்கும் அனலி கலை இலக்கியப் பள்ளியைப்
பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்து பங்கேற்பாளர்களின் ஆதரவு கிடைத்திட
வேண்டினார். மக்களின் குரலாக கலை இலக்கியங்கள் ஒலிக்க வேண்டும். மக்கள் ஓய்வாயிருக்கையில்
இன்பக்கேணியாகவும் ஒன்றாய் இணைகையில் இயங்கு கருவியாகவும் கலை இலக்கியங்களின் இருப்பும்
இயக்கமும் இருக்க வேண்டும் என்பதுவே அனலின் அடிநாதம் என்று தெளிவுபட எடுத்துரைத்தார்.
அவரைத்
தொடர்ந்து தமிழ் பேராசிரியரும் எழுத்தாளருமான முனைவர் சுபசெல்வி அவர்கள் ”வெள்ளிமலை
விராலிமலை” எனும் பாடலைப் பார்வையாளர்களை தன்வயப்படுத்தினார்.
இயற்கை
ஆர்வலரான கோவை யோகநாதன் இவர் இலட்சக்கணக்கான மரங்களை தன்னார்வமாக நட்டு வளர்த்தவர். இதற்காக குடியரசுதலைவரிடம் விருது
பெற்றவர். அவரகள் அனலியின் செயல்பாடுகளுக்காக தான் இயற்கை விவசாயம் செய்யும் இடத்தை
பயன்படுத்த ஒத்துக்கொண்டு உறுதியளித்ததோடு அனலியின் தலைவர் திரு. அரிகரசுதன் அவர்களுக்கு
பொன்னாடை போர்த்தி கௌரவித்து பாராட்டினார். வீதிநாடக கலைஞரான கோவை திரு. அரவிந்தன்
அவர்கள் நாடகம் சார்ந்து முன்னெடுக்கப்படும் அனைத்து செயல்பாடுகளுக்கும் தன்னால் இயன்ற
உதவியை முழுமையாக வழங்குவதாக உறுதிகூறி அனலியின் செயல்பாடுகளை வாழ்த்தினார்.
இறுதியாக
திரு. சுப்ரமணியன் அவர்களின் நன்றி உரைக்க கூடுகை இனிது நிறைவடைந்தது. நிகழ்விற்கு
கோவையின் கலை இலக்கிய ஆர்வலர்களும் ஆளுமைகளும் மாணவப் படைப்பாளர்களும் கலந்து கொண்டு
ஆதரவளித்த்து நிறைவைத் தந்தது.
இவண்
இரா.
அரிகரசுதன், தலைவர், அனலிWednesday, December 19, 2018
களிமண் சிற்பம் பயிற்சிப் பட்டறை
களிமண் சிற்பம் பயிற்சிப் பட்டறை
அனலி குளிர்கால பயிற்சி வகுப்புகளாக களிமண் சிற்பம் பயிற்சி பட்டறை நடத்துகிறது. இவ்வருடம் (2018) டிசம்பர் 28 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறும் இப்பயிற்சிப் பட்டறையில் வயது வேறுபாடு இன்றி யார் வேண்டும் என்றாலும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு தேவைப்படும் களிமண் அனலி வழங்கும். பெயர் பதிவுக்கும் மேலும் தகவல்களுக்கும் அழைப்பிதழில் பதிந்திருக்கும் பேசி எண்களில் தொடர்பு கொள்க.
மாயம் செய்யும் விரல்களைப் பழக்குங்கள். வாழ்த்துகள்.
அனலி குளிர்கால பயிற்சி வகுப்புகளாக களிமண் சிற்பம் பயிற்சி பட்டறை நடத்துகிறது. இவ்வருடம் (2018) டிசம்பர் 28 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறும் இப்பயிற்சிப் பட்டறையில் வயது வேறுபாடு இன்றி யார் வேண்டும் என்றாலும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு தேவைப்படும் களிமண் அனலி வழங்கும். பெயர் பதிவுக்கும் மேலும் தகவல்களுக்கும் அழைப்பிதழில் பதிந்திருக்கும் பேசி எண்களில் தொடர்பு கொள்க.
மாயம் செய்யும் விரல்களைப் பழக்குங்கள். வாழ்த்துகள்.
அனலியின் கல்வி மேலாண்மை
அனலி ஒரு பகுதிநேர பள்ளி. முழுக்க முழுக்க தன்னார்வ சேவை மனதுடனே அனலி இயங்குகிறது. கலை இலக்கிய இறையாண்மையை பேணவும் அவற்றின் ஆற்றலை தலைமுறையினருக்கு உணரச் செய்தலும் கலை இலக்கிய மனப்பாங்கை பரவலாக்குவதுமே இப்பள்ளியின் நோக்கம்.
மாணவ தகுதி
கல்விமுறை
எதிர்கால வழிகாட்டுதல்
மாணவ தகுதி
- ஆர்வமுள்ள எவரும் எந்த வயதினராயினும் அனலியில் இணைந்து படிக்கலாம்.
- அடிப்படை கல்வியறிவு போதுமானது.
வகுப்பு நேரம்
- தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை
- சனி, ஞாயிறு, அரசு விடுமுறை போன்ற நாட்களில் தேவையினடிப்படையில் வகுப்புகள் நடைபெறும்
கல்விமுறை
- தொடர் வகுப்புகளாகவும் பயிற்சி பட்டறைகளாகவும் பாடங்கள் நடத்தப்படும்.
- செயல்முறை கல்வி முறையில் பயிற்றுவிக்கப்படும்.
ஆசான்கள்
- கலை இலக்கியத் தளங்களில் காத்திரமாக பங்காற்றும் பணியாற்றும் கலைஞர்களும் இலக்கிய ஆளுமைகளும் அனலியின் ஆசான்களாக பாடம் பயிற்றுவிப்பர்.
- பள்ளி கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தங்கள் ஓய்வு நேரங்களில் அனலியின் ஆசான்களாக பாடம் பயிற்றுவிப்பர்.
- வெளிமாநில வெளிநாட்டு கலை இலக்கிய மாணவர்கள் ஆளுமைகள் போன்றோர் வருகைதரும்போது அவர்களும் அனலியின் ஆசான்களாக பாடம் பயிற்றுவிப்பர்.
சான்றிதழ்
- அனலியின் சான்றிதழ் வழங்கப்படும்.
- சில குறிப்பிட்ட பாடங்களுக்கு பல்கலைக்கழகங்களின் தொலைதூர படிப்பில் இணைத்து அவற்றின் சான்றிதழ் பெற்றுதர வழிகாட்டப்படும்.
- அனலியில் பயின்றவர்களை சமகால கலை இலக்கிய அமைப்புகளோடும் நிறுவனங்களோடும் இணைந்து பணியாற்றவும் பயணம் செய்யவும் வழிகாட்டுதல்.
- அனலி மாணவர்களில் தகுதியானவர்களை அனலி ஆசான்களாக இணைத்துக் கொள்ளுதல்.
- முன்னாள் மாணவர் சங்கங்கள் உருவாக்கி வழிகாட்டு நிகழ்வுகள் நடாத்துதல்.
- புதிய கலை இலக்கிய அமைப்புகளை உருவாக்குதல்.
பாடங்கள்
நிகழ்த்துக்கலைகள்
- ஒயிலாட்டம்
- கோலாட்டம்
- கழியலாட்டம்
- பறையாட்டம்
- சிலம்பாட்டம்
- மான்கொம்பாட்டம்
- சாட்டைக்குச்சியாட்டம்
- கரகாட்டம்
- பொம்மலாட்டம்
- பழங்குடியினர் நடனங்கள்
- பேச்சாளர் பயிற்சி
- நாடகம்
- கதைச்சொல்லி
- ஓவியம்
- சிற்பம்
- வடிவமைப்பு
- கவிதை
- கட்டுரை
- சிறுகதை
- நாடகம்
- புதினம்
- விமரிசனம்
- தர்க்கம்
- தத்துவம்
- இதழியல்
- நாடகம்
- நடிப்பு
- புகைப்படம்
- திரைக்கதை
- ஆவணத் திரைப்படம்
- குறுந்திரைப்படம்
- படத்தொகுப்பு
- தமிழிலக்கணம்
- சிறுவர் உளவியல்
- உளவியல் ஆற்றுப்படுத்துகை
- கலைவழி உளவியல் ஆற்றுகை
- விளையாட்டாய் கற்பிப்போம்
- பேரிடர்க் கல்வி
- ஊடகக் கல்வி
- மக்களாய்வியல்
- ஆய்வு முறைமைகள்
- ஆய்வரங்கங்கள் அறிமுகம்
- ஆய்வுக் கட்டுரைகள் எழுதுதல்
- பதிப்பித்தல்
- நிகழ்ச்சி மேலாண்மை
- பேரிடர் மேலாண்மை
- ஊடக மேலாண்மை
- சமூகத்தலைமைத்துவம்
Subscribe to:
Posts (Atom)